EPF கொடுப்பனவுகளைச் செலுத்தத் தவறிய தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை!

தேயிலைப் பெருந்தோட்ட நிறுவனங்கள், ஊழியர் சேமலாப நிதிய கொடுப்பனவுகளைச் செலுத்தத் தவறியுள்ளதாக, வெளிநாட்டுத் தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கண்டறியப்பட்டுள்ளது.

EPF கொடுப்பனவுகளைச் செலுத்தத் தவறிய தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை!

தேயிலைப் பெருந்தோட்ட நிறுவனங்கள், ஊழியர் சேமலாப நிதிய கொடுப்பனவுகளைச் செலுத்தத் தவறியுள்ளதாக, வெளிநாட்டுத் தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், பாரியளவான நிலுவை, ஊழியர் சேமலாப நிதியத்துக்குச் செலுத்தவேண்டி உள்ளதாகவும் அந்த குழுவின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெருந்தோட்டத்துறையில், சில நிறுவனங்களினால் செலுத்தப்பட்ட, சுமார் 700 மில்லியன் ரூபாய் தொகை தொடர்பில் வழங்கப்பட்டுள்ள தகவல்களில் முரண்பாடு காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

இதனால், அதனை கணக்கில் பதிவுசெய்ய முடியாமல் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

வெளிநாட்டுத் தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் அண்மையில் கூடியிருந்தது.

ஊழியர்களை பாதுகாத்துக் கொண்டு, ஊழியர் சேமலாப நிதியத்துக்குச் செலுத்த வேண்டிய நிலுவையையும், மாதாந்தக் கொடுப்பனவையும் முறையாகச் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவர் ஹெக்டர் அப்புஹாமி பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்துடன், தேசிய அடையாள அட்டை இலக்கத்துக்கு அமைய கணக்குகளை ஆரம்பிப்பதன் மூலம், ஒரு நபருக்குப் பல கணக்குகள் உருவாக்கப்பட்டிருக்கும் சிக்கலை நீக்க முடியும் எனவும், அது தொடர்பில் கவனம் செலுத்தி செயற்படுமாறும் துறைசார் அதிகாரிகளுக்குக்கு, இந்தக் குழு ஆலோசனை வழங்கியுள்ளது.