16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய ஆசிரியர் கைது!

சுமார் 16 பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியரொருவர் இன்று (11) கைது செய்யப்பட்டதாக களுத்துறை சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய ஆசிரியர்  கைது!
Teacher arrested for sexually abusing 16 female students!

களுத்துறை வடக்கு பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

களுத்துறை வடக்கு - காலி வீதியில் தனியார் வகுப்புகளை நடத்தும் சந்தேகநபரான ஆசிரியர், சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தனது கணவரின் மடிக்கணினியை பரிசோதித்தபோது அதில் சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்படும் காணொளிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டதாக சந்தேக நபரான ஆசிரியரின் மனைவி சந்தப்பட்ட மாணவிகளில் சிலரின் பெற்றோருக்கு அறிவித்துள்ளார். 

இதனையடுத்து, குறித்த பெற்றோர் மூலமாக களுத்துறை வடக்கு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார். 

அவர் இன்று (11) களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.