முதல் 5 நாட்களில் 22,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை!

நெவெம்பர் மாதத்தின் முதல் 5 நாட்களில் 22,202 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

முதல் 5 நாட்களில் 22,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள வாராந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த வருடத்தில் இதுவரையில் இலங்கைக்கு 1,147,657 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

இந்த மாதத்தின் முதல் 5 நாட்களில் ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து 3,866 பேர் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

அத்துடன், ஜேர்மனியில் இருந்து 2,011 பேரும், பிரித்தானியாவிலிருந்து 1,539 பேரும் நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.