ஏ-9 பிரதான வீதியின் மாங்குளம் பகுதியில் வாகன விபத்து - 3 பேர் உயிரிழப்பு!

ஏ-9 பிரதான வீதியின் மாங்குளம் - பனிச்சம்குளம் பிரதேசத்தில் இன்று (15) இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

ஏ-9 பிரதான வீதியின் மாங்குளம் பகுதியில் வாகன விபத்து - 3 பேர் உயிரிழப்பு!

ஏ-9 பிரதான வீதியின் மாங்குளம் - பனிச்சம்குளம் பிரதேசத்தில் இன்று (15) இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் 8 பேர் வரை காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் ஒன்று, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதுண்டதுடன், குறித்த பாரவூர்தி அதன் முன்னால் இருந்த மற்றுமொரு லொறியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இதன்போது, பாரவூர்திக்கு பின்னால் நின்றிருந்த ஒருவரும் வேனில் பயணித்த இருவரும் காயமடைந்த நிலையில், மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த 3 பெண்கள் உள்ளிட்ட 8 பேர் கிளிநொச்சி மற்றும் மாங்குளம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் யாழ்ப்பாணம், வெல்லம்பிட்டி மற்றும் முல்லேரியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.