ஈக்வடோரில் மேலுமொரு அரசியல் தலைவர் படுகொலை!

தென் அமெரிக்க நாடான ஈக்வடோரில் எதிர்வரும் 20 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் கடந்த 9 ஆம் திகதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஜனாதிபதி வேட்பாளர் பெர்னாண்டோ படுகொலை செய்யப்பட்டார்.

ஈக்வடோரில் மேலுமொரு அரசியல் தலைவர் படுகொலை!

 தென் அமெரிக்க நாடான ஈக்வடோரில் எதிர்வரும் 20 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் கடந்த 9 ஆம் திகதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஜனாதிபதி வேட்பாளர் பெர்னாண்டோ படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் ஈக்வடோரில் பிறிதொரு அரசியல் தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி ரபேல் கொரியாவின் குடிமக்கள் புரட்சி கட்சியை சேர்ந்த தலைவரான பெட்ரோ பிரையோன்ஸ் துப்பாக்கி சுட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டார். 

அவர் சான்மேடியோ நகரில் வீட்டில் இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.