கடந்த 24 மணித்தியாலங்களில் 955 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், இன்று அதிகாலை 12.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 955 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் 955 பேர் கைது!

அவர்களில் 39 பேர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், கைதானவர்களில் போதைப்பொருட்களுக்கு அடிமையான 31 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த காலப்பகுதியில், 261 கிராம் ஐஸ் போதைப்பொருள், 435 கிராம் ஹெரோயின், 2 கிலோ 946 கிராம் கேரள கஞ்சா, 3 கிலோ 903 கிராம் மாவா போதைப்பொருள் மற்றும் 1,403 போதை மாத்திரைகள் உள்ளிட்ட பல போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.