ஜெனிற்றாவை பலவந்தமாக இழுத்து சென்று பொலிஸார் கைது செய்த காணொளி. - சர்வதேச ரீதியாக வலுக்கும் கண்டனங்கள்!

வவுனியாவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சென்றிருந்த போது போராட்டத்தில் ஈடுபட்ட வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்கத் தலைவி ஜெனிற்றாவை பலவந்தமாக இழுத்து சென்று பொலிஸார் கைது செய்த காணொளி.

அவர் தமது உறவுகளை மீட்பதற்கான நியாயம் கோரியே அங்கு சென்றார். 

இந்த செயற்பாடானது அரசாங்கம் கொடூரமான ஆட்சியை செய்கின்றது என்பதையே எடுத்துக்காட்டுகின்றது ஏனைய காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளில் சங்க பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும், அவர் உட்பட கைது செய்யப்பட்ட அனைத்து தாய்மார்களையும் உறவுகளையும் உடனடியாக விடுதலை செய்வதற்கு  அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதனிடையே, சர்வதேச ரீதியாக பல புலம்பெயர் அமைப்புகள் இந்த கைதுகள் தொடர்பில் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மார்களை இலங்கை அரசாங்கம் நியாயமாக விடுதலை செய்ய வேண்டும் என பல தரப்பிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.