இந்தியப்பெருங்கடலில் மாலைத்தீவுக்கு அருகில் இன்று மீண்டும் நிலநடுக்கம்!

இந்தியப் பெருங்கடலில்  மாலைத்தீவுக்கு அருகில்  இன்று (29) காலை 8 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்தியப் பெருங்கடலில்  மாலைத்தீவுக்கு அருகில் இன்று (29) காலை 8 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட நில அதிர்வு நிபுணர் நில்மினி தல்தேனா தெரிவித்தார்.

முன்னதாக, ரிக்டர் அளவுகோலில் 4.8, 5.2 மற்றும் 5.8 என 3 நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 10 கிலோமீற்றர் ஆழமான கடலில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தினால் நாட்டுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அமைந்துள்ள நான்கு நில அதிர்வு அளவீடுகளில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.