கொழும்பு - பெலவத்தை நகரில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டவர் மரணம்!

பெலவத்தை நகரில் உள்ள தனியார் மருத்துவ நிறுவனமொன்றுக்கு சிகிச்சைக்காக சென்ற ஒருவரை நேற்று (16) சிலர் கூரிய ஆயுதங்களால் தாக்கிய நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு - பெலவத்தை நகரில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டவர் மரணம்!

பெலவத்தை நகரில் உள்ள தனியார் மருத்துவ நிறுவனமொன்றுக்கு சிகிச்சைக்காக சென்ற ஒருவரை நேற்று (16) சிலர் கூரிய ஆயுதங்களால் தாக்கிய நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொகரதுவ, பெலவத்த பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் களுத்துறை நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக பெலவத்தையில் உள்ள தனியார் மருத்துவ நிறுவனத்திற்குச் சென்றிருந்தார்.

அப்போது, ​​சிற்றூர்ந்து ஒன்றில் வந்த  சிலர் அவரை கூரிய ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, உயிரிழந்தவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு சென்ற அடையாளம் தெரியாத ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துச் சென்றிருந்ததாக அவரின் தந்தை வாக்குமூலம் அளித்துள்ளார்.