நீர்கொழும்பு  தேவாலயத்திற்கு அருகில் கத்திகளுடன்  நபரொருவர் கைது

நீர்கொழும்பு  தேவாலயத்திற்கு அருகில் கத்திகளுடன்  நபரொருவர் கைது

நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள தேவாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) ஈஸ்டர் தினத்தன்று தேவாலயத்தின் நுழைவாயிலில் கூரிய கத்திகளுடன் நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்த நபர் மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய கந்தசாமி வேதநாயகம் என்ற முன்னாள் விடுதலை புலி உறுப்பினர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

அத்தோடு, இவரை கைது செய்த போது காற்சட்டைப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தி ஒன்றும் பயணப் பையிலிருந்த கத்தியொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து கைது செய்யப்பட்டவரிடம்  மேற்கொண்ட நீண்ட விசாரணைகளில் இவர் விடுதலை புலியின்  ஆயுத பிரிவைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர் என தெரிவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.