கொழும்பில் மதில் சுவர் இடிந்து வீழ்ந்து மாணவி உயிரிழப்பு! (காணொளி)

கொழும்பு - வெல்லம்பிட்டி பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் மதில் சுவர் இடிந்து வீழ்ந்து காயமடைந்த 6 பேரில் மாணவி ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் மதில் சுவர் இடிந்து வீழ்ந்து மாணவி உயிரிழப்பு! (காணொளி)

சம்பவத்தில் ஆறு வயதுடைய சிறுமி ஒருவரே உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். 

இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் 5 மாணவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நீர்த்தாங்கியை பொருத்துவதற்காக நிர்மாணிக்கப்பட்டிருந்த மதில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

குறித்த பாடசாலையின் முதலாம் தரத்தில் பயிலும் மாணவர்களே இதன்போது காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது மேலும் ஒரு மாணவனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

update : 

பிரதேச மக்கள் இணைந்து நடத்திய தாக்குதலில் காயமடைந்த வெல்லம்பிட்டி - வேரகொட வித்தியாலயத்தின் அதிபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலையின் மதில் ஒன்று இன்று மதியம் இடிந்து வீழ்ந்த சம்பவத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் ஆறு வயதுடைய சிறுமி ஒருவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் 5 மாணவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் பொரளை சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை ஆகியனவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

நீர்த்தாங்கிக்கு நீரை ஏந்திச் செல்லும் நீர்க்குழாய்கள் பொருத்தப்பட்டிருந்த மதில் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

இந்தநிலையில், பாடசாலைக்குள் பிரவேசித்து, அங்கிருந்த அதிபர் மீது பிரதேச மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணொளி மூலம் - Adaderana.lk