மின்சார பட்டியல் இனி வழங்கப்பட மாட்டாது - E-Billing வசதியை பெறவும்!

இலங்கை மின்சார சபையின் வாடிக்கையாளர்களுக்கு எதிர்வரும் காலங்களில் காகிதத்திலான மின்சார பட்டியல் வழங்கப்படமாட்டாது எனவும், இலத்திரனியல் மின்பட்டியல் (E-Billing) சேவைக்காக பதிவு செய்து கொள்ளுமாறு அறிக்கை ஒன்றில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்சார பட்டியல் இனி வழங்கப்பட மாட்டாது - E-Billing வசதியை பெறவும்!

 
ebil.ceb.lk என்ற இணையத்தளத்தில் இலத்திரனியல் மின்பட்டியல் முறைமைக்கு பதிவு செய்து கொள்ள முடியும்.

இல்லாதபட்சத்தில், 1987 என்ற இலக்கத்துக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் மின்சார வாடிக்கையாளர்கள் இலத்திரனியல் மின்பட்டியல் சேவைக்கு தங்களை பதிவு செய்து கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 

தற்போது தெஹிவளை, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர, மாத்தறை, அம்பலாங்கொடை உள்ளிட்ட பகுதிகளில் இலத்திரனியல் முறையின் கீழ் மின்சார பட்டியல் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. 

மின்சார பட்டியலை அச்சிடும் பணிகளை முற்றாக நிறுத்தும் நோக்கில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது.

இதன்படி, எதிர்வரும் சில மாதங்களில் சகல மின்சார வாடிக்கையாளர்களுக்கும் இலத்திரனியல் மின்சார பட்டியலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.