மாத்தளை நகரை சோகத்தில் ஆழ்திய துயர சம்பவம்!

மாத்தளை நகரை சோகத்தில் ஆழ்திய துயர சம்பவம்!

மாத்தளை – மடவலவுல்பத்த பகுதியில் 17 வயதுடைய மாணவர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் 55 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மடவளை – நாலந்தவத்தை பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவர், நண்பர்கள் இருவருடன் மடவலவுல்பத்த பிரதேசத்திற்குச் சென்றிருந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

நண்பர் ஒருவரினை காதலியைச் சந்திப்பதற்காகக் குறித்த பகுதிக்குச் சென்றிருந்தபோது, காதலியின் தந்தை மற்றும் சகோதரர் உள்ளிட்ட குழுவினர் அவர்களைத் தாக்கியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த மூன்று மாணவர்களும் நாலந்தவத்தை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த மூன்று மாணவர்களும் நாலந்தவத்தை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தாக்கப்பட்டு உயிரிழந்த பாடசாலை மாணவனுக்கு நீதி கோரி மாத்தளையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் பாடசாலை மாணவர்கள் பிரதேச மக்கள் கலந்து கொண்டனர்.