நல்லூரில் யாசகம் பெறச் சென்ற பெண்ணின் குழந்தை கடத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்திற்கு யாசகம் பெறுவதற்கு சென்றிருந்த பெண் ஒருவரின் குழந்தை கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

நல்லூரில் யாசகம் பெறச் சென்ற பெண்ணின் குழந்தை கடத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்திற்கு யாசகம் பெறுவதற்கு சென்றிருந்த பெண் ஒருவரின் குழந்தை கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

வவுனியா - செட்டிகுளத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இரண்டரை வயதான  குழந்தை தமது பாட்டியுடன் இருந்த போது மட்டக்களப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் சிறுமியை அருகில் உள்ள வர்த்தக நிலையத்துக்கு அழைத்துச் செல்வதற்கு பாட்டியிடம் அனுமதி கோரியுள்ளார்.

இதற்கு பாட்டி அனுமதியளித்தமையை அடுத்து சிறுமியை தூக்கிச் சென்ற பெண் மீளத் திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.  

பின்னர் சிறுமியின் தாயார் யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் காணாமல் போயுள்ள சிறுமியின் படமும் தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் தகவல் தெரிந்தால் 021 22 22 222 அல்லது 021 32 11 257 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பை ஏற்படுத்துமாறு யாழ்ப்பாண பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.