வடக்கு - கிழக்கில் ஆட் குறைப்பு தொடர்பில் இலங்கை இராணுவத்தின் அறிவிப்பு!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு தீர்மானிக்கவில்லை என இலங்கை இராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

வடக்கு - கிழக்கில் ஆட் குறைப்பு தொடர்பில் இலங்கை இராணுவத்தின் அறிவிப்பு!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு தீர்மானிக்கவில்லை என இலங்கை இராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்குமான கட்டளைத் தளபதிகளின் எண்ணிகை இரண்டாக குறைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து கருத்து வெளியிட்ட இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் இதனை தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் இராணுவ ஆட்குறைப்பு செய்யப்படவில்லை எனவும், கட்டளை தளபதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 14 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், பாதுகாப்பு கருதி வடக்கு மற்றும் கிழக்கில் அதிகளவான இராணுவத்தினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.