சூரிய சக்தி மின்சாரத்தில் இயங்கும் மீன்பிடி படகு!

சூரிய சக்தியிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தைக் கொண்டு இயங்கக்கூடிய மீன்பிடி படகொன்று இன்று தமது கன்னி பயணத்தை ஆரம்பித்துள்ளது.

சூரிய சக்தி மின்சாரத்தில் இயங்கும் மீன்பிடி படகு!

சூரிய சக்தியிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தைக் கொண்டு இயங்கக்கூடிய மீன்பிடி படகொன்று இன்று தமது கன்னி பயணத்தை ஆரம்பித்துள்ளது.

வல்வெட்டித்துறை கடற்பரப்பில் வெள்ளோட்டத்தை ஆரம்பித்த இந்த படகு, 13 குதிரை வலுக்கொண்ட வேக இயந்திரத்தை கொண்டுள்ளது.

இது கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு மிகவும் பயனுள்ளதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஒருவரின் முயற்சியால் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையானது கடற்றொழிலாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.