யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் அதிசொகுசு பேருந்து விபத்து!

யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் அதிசொகுசு பேருந்து விபத்து!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் அதிசொகுசு பேருந்து வேகக் கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளாகியது. தெய்வாதினமாக எவருக்கும் பாதிப்பு இல்லை.

இன்று அதிகாலை 3.45 மணியளவில் கம்பஹாவில் இந்த விபத்து இடம்பெற்றது என்று தெரிவிக்கப்பட்டது.

அதிவேகமாக பயணித்த அதிசொகுசு பேருந்து மழை காரணமாக வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளானது என்று கூறப்பட்டது.

சாரதியின் இந்த பொறுப்பற்ற செயல் தொடர்பில் அந்த பேருந்தில் பயணித்தவர்கள் அச்சத்தையும் விசனத்தையும் வெளியிட்டனர்.