இலங்கை கிரிக்கெட் அணி வெற்றிக்கு மைதானத்தில் உயிரூட்டிய பேர்சி காலமானார்.

கிரிக்கெட் விளையாட்டையும் இலங்கை கிரிக்கெட்டையும் தீவிரமாக நேசித்த இலங்கை கிரிக்கெட் அணிக்காக மைதானத்தில் ஆதரவு காட்டிய பேர்சி அபேசேகர தனது 87 ஆவது வயதில் காலமானார்

இலங்கை கிரிக்கெட் அணி வெற்றிக்கு மைதானத்தில் உயிரூட்டிய பேர்சி காலமானார்.

தேசியக் கொடியுடன் தாயக அணியையும் ஆதரவாளர்களையும் நீண்ட காலமாக ஊக்கப்படுத்தி வந்த பேர்சி இறுதி காலத்தில் நோய் வாய்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் 

1948 ஆம் ஆண்டில் இலங்கை அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச போட்டியைக் கண்டுகளித்த இவர்

1979 ஆம் ஆண்டு இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் இருந்து இலங்கை அணிக்கு ஆதரவாக சகல போட்டிகளிலும் தேசியக்கொடியுடன் விளையாட்டு மைதானத்தை வலம் வந்து ஊக்கமளித்தார்.....