Breaking news : பேருந்தின் மீது மரம் வீழ்ந்து விபத்து மூவர் காயம்- வாகன நெரிசல்!

அவிசாவளை - கொஸ்கம பகுதியில் பயணிகள் பேருந்தின் ஒன்றின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர்.

Breaking news : பேருந்தின் மீது மரம் வீழ்ந்து விபத்து  மூவர் காயம்- வாகன நெரிசல்!

அவிசாவளை - கொஸ்கம பகுதியில் பயணிகள் பேருந்தின் ஒன்றின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொஸ்கம – அளுத் அம்பலம பகுதியில் நிலவிய அதிக மழையுடனான வானிலையை அடுத்தே, இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றின் மீதே மரம் முறிந்து வீழ்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து காரணமாக கொழும்பு – அவிசாவளை வீதியின் கொஸ்கம அண்மித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.