தமிழ் விக்ரமசிங்கவாக மாறிய ஜனாதிபதியின் பெயர்: சமூக வலைத்தளங்களில் பரவும் சர்ச்சை!

இலங்கைப் பிரதமரின் ஊடகப் பிரிவின் கவனக்குறைவால் ஜனாதிபதியில் பெயரில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி தமிழ் விக்ரமசிங்க (President Tamil Wickremesinghe) என்று ஆங்கிலத்தில் தவறாக எழுதப்பட்ட விடயம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

தமிழ் விக்ரமசிங்கவாக மாறிய ஜனாதிபதியின் பெயர்: சமூக வலைத்தளங்களில் பரவும் சர்ச்சை!

கடந்த ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதியிட்ட செய்திக்குறிப்பில், இந்த தவறு இடம்பெற்றுள்ளது.

 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் ரீட் மாவத்தை றோயல் கல்லூரியில் நடைபெற்ற நூற்றாண்டு விழா தொடர்பான செய்தியில் பிரதமர் அலுவலகம் ஜனாதிபதியின் பெயர் தவறாக பிரசுரிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சர்களான சுசில் பிரேமஜந்த, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, கயந்த கருணாதிலக, எம்.ஏ.சுமந்திரன், ரவூப் ஹக்கீம், இரான் விக்ரமரத்ன, ஹர்ஷ டி சில்வா, சி.வி.விக்னேஸ்வரன், அதிபர் கவிதா ஜயவர்தன மற்றும் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.

எவ்வாறாயினும், ஊடகவியலாளர் ஒருவர் ஜனாதிபதியின் பணிப்பாளரும் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவிற்கு அறிவித்ததையடுத்து குறித்த வசனப் பிழை திருத்தப்பட்டது.