நடிகர் லொள்ளு சபா சேஷு காலமானார்

நடிகர் லொள்ளு சபா சேஷு காலமானார்

தமிழ் சினிமாவில் கவனிக்கப்பட்ட நடிகராக இருந்தவர் சேஷு. லொள்ளு சபா மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் பல படங்களில் கவனம் ஈர்க்கும் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றார். குறிப்பாக, சந்தானம் படங்களில் தவறாமல் இருக்கும் நடிகர் என்கிற அடையாளத்துடன் இருந்தவர்.

 சந்தானத்துடன் ஏ ஒன், வடக்குப்பட்டி ராமசாமி படங்களில் நடித்து பலரையும் சிரிக்க வைத்தார் சேஷு. பாரிஸ் ஜெயராஜ் படத்தில் போலி புரோகிதரான சேஷு, தன் உடல்மொழியிலேயே கண்ணீர் வரும் அளவிற்கு சிரிக்க வைத்து தன் திறமையைக் காட்டினார்.

சில ஆண்டுகளாக சினிமா உலகம் அவரைப் பயன்படுத்தி வந்த நிலையில், இம்மாத தொடக்கத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேஷு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

 இந்த நிலையில், இன்று உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததார். அவருடைய மறைவிற்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.