மற்றுமொரு பேருந்து விபத்து - பெண் ஒருவர் மரணம் 23 பேர் காயம்!

வரகாபொல, துல்ஹிரிய பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

வரகாபொல, துல்ஹிரிய பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுவுள்ளதாக வரக்காபொல ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டி.எம்.எம்.எல் அம்ஜத் தெரிவித்தார்.

அம்பேபுஸ்ஸவில் இருந்து அலவ்வ நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துடன் எதிர்திசையில் பயணித்த பாரவூர்தி நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.