களுபோவிலை மருத்துவமனையில் மற்றுமொரு பெண்ணும் உயிரிழப்பு!

களுபோவிலை மருத்துவமனையில் கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட மற்றுமொரு பெண்ணும் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. கொழும்பு தெற்கு களுபோவிலை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, பாணந்துறை பகுதியை சேர்ந்த, 72 வயதான தாயொருவர் திடீரென ஏற்பட்ட நோய் நிலைமையால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

களுபோவிலை மருத்துவமனையில் மற்றுமொரு பெண்ணும் உயிரிழப்பு!

குறித்த தாய் கண் சத்திர சிக்சைக்காக, கடந்த 6ஆம் திகதி கொழும்பு தெற்கு களுபோவிலை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவருடன், சத்திர சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஏனைய அனைவரும் சிகிச்சையளிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில், குறித்த பெண்ணின் உறவினர் ஒருவர் மருத்துவமனை அதிகாரிகளிடம் வினவியுள்ளார்

அதற்கு பதிலளித்த மருத்துவமனை அதிகாரிகள், குறித்த பெண்ணின் கண் சத்திரசிகிச்சையை உரிய முறையில் முன்னெடுக்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக குறித்த பெண்ணை தொடர்ந்தும் மருத்துவமனையில் வைத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் கடந்த 10ஆம் திகதி திடீரென நோய் நிலைமைக்கு உள்ளானதன் காரணமாக அவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

இந்தநிலையில், குறித்த மரணம், சந்தேகத்திற்கிடமானது என அவரது குடும்பத்தினர் குற்றம்சுமத்தியுள்ளனர்.

முன்னதாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், ஒருவர் உயிரிழந்திருந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.