அனுரகுமார திஸாநாயக்க வேட்புமனுவில் கையொப்பமிட்டார்!

அனுரகுமார திஸாநாயக்க வேட்புமனுவில் கையொப்பமிட்டார்!

எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக இன்று (12) முற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் அனுரகுமார திஸாநாயக்க வேட்பாளர் வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் தோழர் டாக்டர் நிஹால் அபேசிங்க, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வாவை உள்ளிட்ட தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.