அரியாலையில் பெண் கொலை - இரண்டாவது கணவர் கைது!

யாழ்ப்பாணம் - அரியாலை - கொழும்புத்துறைப் பகுதியில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொ​லை ​செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்ணின் இரண்டாவது கணவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
 
இந்த சம்பவத்தின் போது இன்று அதிகாலை இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டார்.
 
முல்லைத்தீவு - உடையார்கட்டு என்ற நிரந்தர முகவரியை சேர்ந்த 28 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
 
கொலை செய்யப்பட்ட பெண்ணின் இரண்டாவது கணவருடன் ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாணையில் தெரியவந்துள்ளது. தெரிவித்துள்ளனர்.
 
கொலைச் சம்பவம் தொடர்பாக 34 வயதான சந்தேகநபரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.