வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்தின் சில இடங்களிலும் இனறைய தினம் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையை விடவும் அவதானத்துக்குரிய அளவில் வெப்பநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், கடும் வெயிலைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது