வருடாந்த ஓப்பந்தம் - 2 முக்கிய வீரர்கள் நீக்கம்!

வருடாந்த ஓப்பந்தம் - 2 முக்கிய வீரர்கள் நீக்கம்!

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்தத்தில் இருந்து ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகிய வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ள ஒப்பந்த பட்டியலில் இருந்து குறித்த விடயம் தெரியவந்துள்ளது.

ரஞ்சி கிண்ண தொடரில் விளையாடாத வீரர்கள் மீது பிசிசிஐ சடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் குறித்த ஒப்பந்தப்பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில், குறித்த பட்டியலின் A+ பிரிவில் ரோகித், விராட் கோலி, பும்ரா, ஜடேஜா ஆகியோரும் A பிரிவில் தமிழக வீரர் அஸ்வின், சமி, சிராஜ், கே.எல் ராகுல், சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

அத்துடன் இளம் வீரரான ஜெய்ஸ்வால் B பிரிவில் இடம் பிடித்துள்ளார்.