மகளுக்காக  டிக்கெட் கேட்ட அஸ்வின்!

மகளுக்காக  டிக்கெட் கேட்ட அஸ்வின்!

டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், 2008ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி பல வெற்றிகளை தேடித்தந்தவர்.

இந்த நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவிக்கின்றது,முதல் 21 லீக்  போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.

வரும் 22 ஆம் திகதி  நடக்கவிருக்கும்  நடப்பாண்டின் முதல் ஐபிஎல் டி20  லீக் போட்டியில் நடப்புச்சாம்பியன் சென்னை அணியும், பெங்களூரு அணியும் களம் காண உள்ளனர்.

இந்த போட்டிக்கு டிக்கெட் விற்பனை நேற்று நிகழ்நிலையில்  நடந்தது. இதனை அடுத்து  கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது  மகள்களுக்கு முதல் போட்டியை காண டிக்கெட் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

தனது மகள்கள், நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் அறிமுகப்போட்டி மற்றும் கலைநிகழ்ச்சிகளை  காண விரும்புவதாக கூறியுள்ள அஸ்வின், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனக்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.