படகு கவிழ்ந்ததில் குறைந்தது 78 பேர் உயிரிழப்பு - கொங்கோ (காணொளி)

கொங்கோ குடியரசின் கிழக்குப் பகுதியில் உள்ள கிவு ஏரியில் வியாழனன்று பெரும் கூட்டம் அலைமோதிய படகு ஒன்று கவிழ்ந்ததில் 78 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் ஆளுநர் ஒருவர் தெரிவித்தார்.

உள்ளூர் அதிகாரிகளின் தகவலின்படி, குறித்த கப்பலில் 278 பேர் இருந்ததாக நம்பப்படுகிறது.

கப்பலில் கப்பலில் பயணித்த பெரும்பாலானவர்கள் காணாமல் போன நிலையில் சில மணிநேரங்களுக்குப் பிறகு தீவிரமான தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தெற்கு கிவு மாகாணத்தின் ஆளுநர் ஜீன்-ஜாக் புருசி, இறப்பு எண்ணிக்கை தற்காலிகமானது என்றும், இறப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் தெரிவித்தார்.

தெற்கு கிவு மாகாணத்தில் உள்ள மினோவா துறைமுகத்தில் இருந்து படகு புறப்பட்டு வடக்கு கிவு மாகாணத்தில் உள்ள கோமா பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்ததாக ஆளுநர் புருசி  குறிப்பிட்டார். 

"எங்களிடம் முழு சூழ்நிலை குறித்த காணொளிகள் இல்லை, ஆனால் நாளை அதை நாங்கள் பெறுவோம்," என்று அவர் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.