காசாவில் மனிதாபிமான அமைப்பு வீழ்ச்சி!

காசாவில் மனிதாபிமான அமைப்பு வீழ்ச்சியடையக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார்.

காசாவில் மனிதாபிமான அமைப்பு வீழ்ச்சி!

காசா மீது இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்களை நடாத்தி வரும் நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன், பொது ஒழுங்கு முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மக்களிடையே தொற்று நோய்கள் பரவுவதற்கான சாத்தியம் நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

மக்கள் ஏனைய நாடுகளுக்கு பாதுகாப்பு கோரி செல்வதும் தற்போது அதிகரித்து வருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, காசாவுக்கு எரிபொருட்களை கொண்டுவருவதற்கு இஸ்ரேல் அனுமதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.