வாகன இறக்குமதிக்கு தடை!  44,000 வாகனங்கள்  சந்தைக்கு விடுவிப்பு?

வாகன இறக்குமதிக்கு தடை!  44,000 வாகனங்கள்  சந்தைக்கு விடுவிப்பு?

வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் 44,000 வாகனங்கள் உள்ளூர் சந்தைக்கு விடுவிக்கப் ப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

விடுவிக்கப்பட்ட 44,430 வாகனங்களில் 38,144 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 6,286 கார்கள் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையில் இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலப்பகுதியில் இந்த வாகனங்கள் உள்ளூர் சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அண்மையில் நிதியமைச்சில் உள்ளூர் வாகன உற்பத்தியாளர்கள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே நிதி இராஜாங்க அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

இச்சந்திப்பின் போது வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பிலும் முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

உள்நாட்டு வாகன உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள், இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கும் அதே வேளையில், உள்ளூர் வாகனங்களை இணைக்கும் வணிகங்களிலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டினர்.