ஜெரோம் பெர்னாண்டோவின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு!

மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் கட்டுப்பாட்டில் உள்ள 9 க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை பரிசீலிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம்  குற்றப் புலனாய்வுப் திணைக்களத்துக்கு இன்று (18) உத்தரவிட்டுள்ளது.

ஜெரோம் பெர்னாண்டோவின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு!

மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் கட்டுப்பாட்டில் உள்ள 9 க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை பரிசீலிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம்  குற்றப் புலனாய்வுப் திணைக்களத்துக்கு இன்று (18) உத்தரவிட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அதன்படி, போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகள், அவரது தனிப்பட்ட வணிக ஆவணங்கள், அவர் ஜெபக் கூட்டங்களை நடத்தும் மத்திய நிலையங்களின் கணக்குகள், அரச மற்றும் தனியார் வங்கிகளில் உள்ள அவரது மனைவியின் கணக்குகள் ஆகியவற்றை பரிசீலிக்க  நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.