பொருளாதார வங்குரோத்து ஆய்வுக்குழுவில் இருந்து  ஐக்கிய மக்கள் சக்தி விலகல்!

பொருளாதார வங்குரோத்து நிலையை அடைவதற்கான காரணம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவில் இருந்து விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தி இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கடிதம் ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளது.

பொருளாதார வங்குரோத்து ஆய்வுக்குழுவில் இருந்து  ஐக்கிய மக்கள் சக்தி விலகல்!

பொருளாதார வங்குரோத்து நிலையை அடைவதற்கான காரணம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவில் இருந்து விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தி இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கடிதம் ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளது.

இன்று நாடாளுமன்றில் கருத்துரைத்த ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் அந்த குழுவின் தலைவராக இருப்பது பொருத்தமற்றது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த பதவி எதிர்கட்சி ஒன்றுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும்  அவர் வலியுறுத்தியுள்ளார்.