பௌத்தசாசன அமைச்சு அதிரடி அறிவிப்பு - தையிட்டி விவகாரம்
![பௌத்தசாசன அமைச்சு அதிரடி அறிவிப்பு - தையிட்டி விவகாரம்](https://tamilvisions.com/uploads/images/202502/image_870x_67adb8beb58f9.jpg)
யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை தொடர்பில் இராணுவத்தினருடனும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக பௌத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரமானது, தேசிய ஐக்கியம் தொடர்பில் உணர்வுபூர்வமானதாக காணப்படுவதை கருத்தில் கொண்டு,
இது தொடர்பில் காணப்படும் குழப்பங்களிற்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக பௌத்தசாசன அமைச்சின் செயலாளர் ஏ.எம்.பி.எம்.பி அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.
இராணுவம் தற்போது அந்த விகாரையை நிர்வகித்துவந்தாலும் அரசாங்கம் பௌத்த விவகாரங்களிற்கான ஆணையாளர் அலுவலகத்தின் கீழ் இந்த விகாரையை பதிவு செய்யவுள்ளதாகவும் பௌத்தசாசன அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ” இராணுவமே தற்போது விகாரையை நிர்வகிக்கின்றது எனவும், தற்போது அங்கு கட்டுமானப்பணிகள் இடம்பெறுகின்றன எனவும், பௌத்த மதகுரு ஒருவர் அங்கு தங்கியுள்ளார் எனவும், பாதுகாப்பு அமைச்சு தன்னால் அதனை தொடர்ந்து நிர்வகிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பௌத்த விவகாரங்களிற்கான ஆணையாளர் அலுவலகத்தின் கீழ் இந்த விகாரையை பதிவு செய்யவேண்டுமென
பாதுகாப்பு அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது எனவும், இந்த பெயரில் விகாரையொன்று ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், ஆனால் அங்கு நிலம் மட்டுமே உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இராணுவத்தினரும் கடற்படையினரும் இரண்டு பௌத்த ஆலயங்களை நிர்வகிக்கின்றனர் எனவும்,
இது தமிழ் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் இராணுவத்தினால் அதனை நிர்வகிக்க முடியாவிட்டால்
அதற்கு தீர்வை காண்பதற்கு நாமே நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.