காணி விடுவிப்பு தொடர்பில் சாதகமான பதிலை வழங்குவாரா ஜனாதிபதி!

ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யும் போது, காணி விடுவிப்பு தொடர்பில் சாதகமான பதிலை வழங்குவாரென எதிர்பார்ப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

காணி விடுவிப்பு தொடர்பில் சாதகமான பதிலை வழங்குவாரா ஜனாதிபதி!

ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யும் போது, காணி விடுவிப்பு தொடர்பில் சாதகமான பதிலை வழங்குவாரென எதிர்பார்ப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் பூர்த்தியடையுமென எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உயர் பாதுகாப்பு வலயமாக படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பதற்கான முயற்சிகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.