டுபாயில் தலைமறைவானவருடன் பண பரிவர்த்தனை - இலங்கை சந்தேகநபர் கைது!

டுபாயில் தலைமறைவாகியுள்ள தரங்க என்ற திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவருடன், பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வரும் நபர் ஒருவரை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குருணாகலையில் வைத்து கைது செய்துள்ளனர்.

டுபாயில் தலைமறைவானவருடன் பண பரிவர்த்தனை - இலங்கை சந்தேகநபர் கைது!

டுபாயில் தலைமறைவாகியுள்ள தரங்க என்ற திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவருடன், பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வரும் நபர் ஒருவரை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குருணாகலையில் வைத்து கைது செய்துள்ளனர்.

எம்பிலிபிட்டிய பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரால் கடந்த 18ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 55 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளுக்கமைய, மாவத்தகம பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதானவர்கள் திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவரும் டுபாய் தரங்கவின் உறவினர் எனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர் டுபாய் தரங்கவின் போதைப்பொருள் வலையமைப்பில் பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டுவந்த பிரதானமானவர்களில் ஒருவர் எனவும் தெரியவந்துள்ளது.