கனடா அனுப்புவதாக மோசடியில் ஈடுபட்டவர் விளக்கமறியலில்..

கனடா அனுப்புவதாக பணமோசடியில் ஈடுபட்ட காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கனடா அனுப்புவதாக மோசடியில் ஈடுபட்டவர் விளக்கமறியலில்..

கனடா அனுப்புவதாக பணமோசடியில் ஈடுபட்ட காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் பளை பகுதியைச்சேர்ந்த பெண் ஒருவர் சமுக வலைத்தளம் ஊடாக வந்த விளம்பரம் ஒன்றில் அறிமுகமாகி கனடா செல்வதற்காக பத்து லட்சம் வைப்பிலிட்டுள்ளார்.

அதன் பின் நீண்ட நாட்கள் காலந்தாழ்த்தி வந்ததால் கொடிகாமம் பொலிஸார் ஊடாக யாழ் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டார்.

விசாரணைகளை மேற்கொண்ட யாழ் மாவட்ட விசேட குற்றவிசாரணைப் பிரிவு  பொறுப்பதிகாரி குணறோயன் தலைமையிலான குழுவினர் காத்தான் குடியைச் சேர்ந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான 57 வயதுடைய  சந்தேகநபரை கைது செய்து  யாழ்ப்பாணம் மேலதிக நீதவானிடம் முன்னிலைப்படுத்தினர்.

இதன்போது சந்தேகநபரை விளக்கமறியலிலை் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்