24 மணிநேரத்திற்குள் 65 முறைப்பாடுகள்!

24 மணிநேரத்திற்குள் 65 முறைப்பாடுகள்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணி நேரத்திற்குள் 65 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு இன்று (24) வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அந்தவகையில், ஜூலை 31ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 24ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மொத்தமாக 901 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 427 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 450 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.