மாணிக்கக் கற்களை கடத்துவதற்கு முற்பட்ட சீன தம்பதியர் கைது!

சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கற்களை நாட்டில் இருந்து கடத்துவதற்கு முற்பட்ட சீன தம்பதியர் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணிக்கக் கற்களை கடத்துவதற்கு முற்பட்ட சீன தம்பதியர் கைது!

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, குறித்த தம்பதியர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, அவர்களிடம் இருந்து 175 மாணிக்கக் கற்கள் மீட்கப்பட்டுள்ளன.

மாணிக்கக் கற்கள் மற்றும் கைது செய்யப்பட்ட சீன தம்பதியர் மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.