தினேஷ் ஷாப்டர் மரணம் குறித்த காரணம் விரைவில் வெளியாகும் - மருத்துவ நிபுணர் குழு!

சனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் தலைவரும், தொழிலதிபருமான தினேஷ் ஷாப்டரின் மரணம் பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவ குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் மரணத்திற்கான காரணங்கள் தொடர்பான முடிவை அறிவிக்கவுள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய இன்று (08) திறந்த நீதிமன்றத்தில் அறிவித்தார்.

தினேஷ் ஷாப்டர் மரணம் குறித்த காரணம் விரைவில் வெளியாகும் - மருத்துவ நிபுணர் குழு!

சனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் தலைவரும், தொழிலதிபருமான தினேஷ் ஷாப்டரின் மரணம் பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவ குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் மரணத்திற்கான காரணங்கள் தொடர்பான முடிவை அறிவிக்கவுள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய இன்று (08) திறந்த நீதிமன்றத்தில் அறிவித்தார்.

குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான் இதனைத் தெரிவித்தார்.

மீண்டுமொரு சுற்று கலந்துரையாடலை நடத்துவது அவசியம் என சம்பந்தப்பட்ட மருத்துவ குழு தமக்கு அறிவித்துள்ளதாகவும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, விசாரணை தொடர்பான மரபணு அறிக்கை எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்று தெரிவித்தார்.

 அறிக்கையை அழைப்பதற்கு தேவையான கோரிக்கைகளை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதவான்  அறிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.