29 கோடி ரூபாய் பெறுமதியான இரத்தின கற்களுடன் பெண் கைது!

சுமார் 29 கோடி 10 இலட்ச ரூபாய்க்கும் அதிக பெறுமதி கொண்ட இரத்தின கற்களை சட்டவிரோதமாக சென்னைக்கு கொண்டு செல்ல முயன்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

29 கோடி ரூபாய் பெறுமதியான இரத்தின கற்களுடன் பெண் கைது!

சுமார் 29 கோடி 10 இலட்ச ரூபாய்க்கும் அதிக பெறுமதி கொண்ட இரத்தின கற்களை சட்டவிரோதமாக சென்னைக்கு கொண்டு செல்ல முயன்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தில் வைத்து 2 கிலோ 311 கிராம் நிறையுடைய  இரத்தினக்கற்களுடன் குறித்த பெண் இன்று (30) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர், ஒருகொடவத்த பகுதியை சேர்ந்த 30 வயதுடையவர் எனவும்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சுங்க திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு  வருகின்றனர்.