மின்சாரக் கட்டணம் ஓரளவு அதிகரிக்கப்படும் - அரசாங்கம் அறிவிப்பு!

மின்சாரக் கட்டணத்தில் ஓரளவு அதிகரிப்பு ஏற்படுமென ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
இந்த விலை உயர்வு எதிர்வரும் ஜூன் மாதம் முதல் அமுலுக்கு வரும் என்றும், கடந்த டிசம்பர் மாத மின் கட்டணத்தை விட இது அதிகமாக இருக்காது என்றும் அவர் கூறினார்.
வருடத்துக்கு இருமுறை நடைபெறும் மின் விலை திருத்தத்தின்படி இந்த விலை திருத்தம் செய்யப்படும் என்றும் அவர் கூறுகிறார்.
மின்சார சபையின் 220 பில்லியன் கடன் மீள் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் ஒரு பகுதி மின்சார கட்டணத்தில் சேர்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.