தடுப்பூசி மருந்து மோசடி கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் CID வாக்குமூலம் பதிவு!

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி மருந்து குப்பிகள் இறக்குமதி செய்யப்பட்டதில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் 2 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

தடுப்பூசி மருந்து மோசடி கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் CID வாக்குமூலம் பதிவு!

இதற்காக, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்று, கொழும்பிலுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் இல்லத்துக்கு இன்று மதியம் சென்றிருந்தனர்.

இதன்போது, தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்து குப்பிகள் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படும் விடயத்துடன் தொடர்புடைய சகல ஆவணங்களையும் விசாரணை அதிகாரிகளிடம் கையளித்துள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, குறித்த தடுப்பு மருந்தை இறக்குமதி செய்த நிறுவனத்தின் உரிமையாளர் சுகத் ஜானக பெர்னாண்டோ ஆகியோர் முன்னதாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

அதேநேரம் இந்த சம்பவம் தொடர்பில் மருத்துவ விநியோக பிரிவின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் கபில விக்ரமநாயக்க உள்ளிட்ட நால்வர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.