வழமைக்கு திரும்பிய ரயில் சேவைகள் - தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பை கைவிட்டன!

வழமைக்கு திரும்பிய ரயில் சேவைகள் - தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பை கைவிட்டன!

போக்குவரத்து அமைச்சருடன் நேற்று மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, ரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பை கைவிட்டுள்ளன.

ரயில் நிலைய அதிபர்கள் சங்கம், கட்டுப்பாட்டாளர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் 

இவ்வாறு மீளப்பெறப்பட்டது.

முன்னதாக இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்ததால் போராட்டம் தொடரும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.

எனினும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு போக்குவரத்து அமைச்சர் உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிடும் தீர்மானத்தை எடுத்ததாக சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.