பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்களை கடத்திய மாணவர்கள் - தாக்குதல் சம்பவம்!

களனி பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று அந்த பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவரை கடத்திச் சென்று தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்களை கடத்திய    மாணவர்கள் - தாக்குதல் சம்பவம்!

குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நேற்றைய தினம் பல்கலைக்கழகத்திலுள்ள விடுதியில் இருந்தபோது, மாணவர்கள் சிலர் அவர்களை வலுக்கட்டாயமாக மோட்டார்களில் கடத்திச் சென்று தாக்கியுள்ளனர்.

காயமடைந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கிரிபத்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இந்தநிலையில், தாக்குதல் நடத்திய மாணவர்களை கைது செய்யும் நோக்கில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.