ராகம - எலபிட்டிவலவில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் உயிரிழப்பு!

ராகம - எலபிட்டிவலவில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் உயிரிழப்பு!

ராகம - எலபிட்டிவல பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று (21) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

சம்பவத்தில் 39 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே குறித்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.