பல மாநிலங்களிலிருந்து படையெடுத்த விவசாயிகள் டெல்லியில் போராட்டம்!

பல மாநிலங்களிலிருந்து படையெடுத்த விவசாயிகள் டெல்லியில் போராட்டம்!

இந்தியாவின் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்தும் படையெடுத்த விவசாயிகள் டெல்லியில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்றனர்.

12 கோரிக்கைகளை முன்வைத்து இந்திய விவசாயிகள் இவ்வாறு முற்றுகை போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன்படி, ஹரியானாவின் எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.