வீட்டின் கூரையிலிருந்து கீழே விழுந்த நபர் உயிரிழப்பு!

வீட்டின் கூரையிலிருந்து கீழே விழுந்த நபர் உயிரிழப்பு!

தென்னிலங்கை - புலத்சிங்கள பகுதியில் வீடுடொன்றின் கூரையை சரிசெய்வதற்கு சென்ற ஒருவர் நிலத்தில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

தெரணியகல பகுதியை சேர்ந்த 50 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வீடுடொன்றின் கூரையை சரிசெய்துகொண்டிருந்த போது தவறி வீழ்ந்த நிலையில் காயமடைந்துள்ளார். 

இந்தநிலையில், காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.