இராகலை நெடுங்குடியிருப்பில் 20 வீடுகள் முற்றாக தீக்கிரை!

இராகலை கீழ்பிரிவில் உள்ள நெடுங்குடியிருப்பொன்றில் இன்று முற்பகல் ஏற்பட்ட தீப்பரலில் 20 வீடுகள் முற்றாக எரியுண்டன. இதன்காரணமாக அந்த குடியிருப்புக்களை சேர்ந்த சுமார் 75 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இராகலை நெடுங்குடியிருப்பில் 20 வீடுகள் முற்றாக தீக்கிரை!

இராகலை கீழ்பிரிவில் உள்ள நெடுங்குடியிருப்பொன்றில் இன்று முற்பகல் ஏற்பட்ட தீப்பரலில் 20 வீடுகள் முற்றாக எரியுண்டன.

இதன்காரணமாக அந்த குடியிருப்புக்களை சேர்ந்த சுமார் 75 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று முற்பகல் ஏற்பட்ட தீப்பரவலை காவல்துறையினர், தீயணைப்பு பிரிவினர், பிரதேச மக்கள் ஆகியோர் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீப்பரவலில் எந்தவித உயிர்சேதமும் ஏற்படாத போதிலும், பெருமளவில் பொருட் தேசங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வீட்டு உபகரணங்கள், முக்கிய ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என்பன தீக்கிரையாகியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் தோட்ட வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் நுவரெலியா பிரதேச சபை ஊடாக வழங்கப்படுகின்றன.

இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் இராகலை காவல்துறையினர் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.