ரயில் பொதி போக்குவரத்து கட்டணம் 80% ஆல் அதிகரிப்பு!

ரயில் பொதி போக்குவரத்து கட்டணம் 80% ஆல் அதிகரிப்பு!

ரயில்களில் கொண்டு செல்லப்படும் பொதிகளுக்கான கட்டணம் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ரயில் பொதி சேவைக் கட்டணம் இன்று முதல் 80 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொல குறிப்பிட்டுள்ளார். 

ரயில்களில் கொண்டு செல்லப்படும் பொதிகளுக்கு இதுவரை 50 ரூபாய் கட்டணம் அறவிடப்பட்ட நிலையில் இன்று முதல் குறித்த கட்டணம் 150 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.